தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
1944 - 1945ம் ஆண்டுகளில் தியாகராஜ பாகவதர் நடிப்பதாக நான்கு படங்கள் அறிவிக்கப்பட்டது. அவற்றில் ஒன்றுதான் 'கோகுலதாஸி'. லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் எம்.கே.டி பாகவதர் 30 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட பல படங்களில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹொன்னப்ப பாகவதர் நடித்தார். அதில் இந்த படமும் ஒன்று.
'கோகுலதாஸி' பட திரைக்கதை எழுத்தாளர் இளங்கோவனால் எழுதப்பட்ட ஒரு புராண கற்பனை கதை. இதில் ஹொன்னப்பா மூன்று வேடங்களில் நடித்தார். நாரதர், பார்வதியின் சாபத்தை எதிர்கொள்ளும் காமரூபன், மற்றும் கதாநாயகி அனுராதாவை (ராஜம்மா) கவர மாறுவேடத்தில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் நகைக்கடைக்காரன் ஆகிய வேடங்களில் நடித்தார். கதாநாயகி ராஜம்மா நடனக் கலைஞராகவும், தேவதாசியாகவும் இரண்டு வேடங்களில் நடித்தார். லலிதாவும், பத்மினியும் துணை வேடங்களில் நடித்தனர், நடனமாடினர்.
பாடல்கள் பாபநாசம் சிவன் மற்றும் அவரது சகோதரர் ராஜகோபால ஐயர் ஆகியோரால் எழுதப்பட்டன. எஸ்.வி. வெங்கடராமன் இசையமைத்தார். கே.சுப்பிரமணியம் தயாரித்து, இயக்கினார். திறமையான நடிகர்கள், இசை மற்றும் திறமையான இயக்கம் இருந்தபோதிலும், கோகுலதாஸி வெற்றி பெறவில்லை.