50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு |
மிகப்பெரிய ஏற்றங்களும், மிகப்பெரிய இறக்கங்களும் கொண்டது விஜயகாந்த் சினிமா வாழ்க்கை. சட்டம் ஒரு இருட்டறை, வைதேகி காத்திருந்தாள் படத்திற்கு பிறகு அவரது திரை வாழ்க்கை முற்றிலும் மாறியது. ரஜினி, கமல் இருவரும் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், தனக்கென தனி பாதை போட்டு வெற்றி படங்களை கொடுத்தவர் விஜயகாந்த்.
1984ம் ஆண்டு, விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டு. அந்த வருடத்தில் மட்டும் 18 படங்களில் நடித்தார் விஜயகாந்த். குழந்தை யேசு, சபாஷ், தீர்ப்பு என் கையில், நல்லநாள், நாளை உனது நாள், நூறாவது நாள், மதுரை சூரன், மெட்ராஸ் வாத்தியார், வீட்டுக்கு ஒரு கண்ணகி, வெள்ளைப் புறா ஒன்று, வெற்றி, வேங்கையின் மைந்தன், ஜனவரி 1, குடும்பம், சத்தியம் நீயே, மாமன் மச்சான், உள்பட அந்த வருடத்தில் மொத்தம் 18 படங்களில் நடித்தார் விஜயகாந்த். இந்தப் படங்களுடன்தான் விஜயகாந்துக்கு திருப்பம் தந்த 'வைதேகி காத்திருந்தாள்' படமும் வெளிவந்தது.