தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

அஜித் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'குட் பேட் அக்லி'. தமிழகத்தில் மட்டும் இப்படம் 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது. இப்படத்தில் இளையராஜா இசையமைத்த சில பாடல்கள் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தன்னிடம் அனுமதி பெறாமல் அதைப் பயன்படுத்தியுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு, பகிரங்க மன்னிப்பு, பாடல்களை நீக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்.
இளையராஜா சார்பில் பேசிய அவரது வழக்கறிஞர்கள், அவரது அனுமதி இல்லாமல் பாடலை உருமாற்றம் செய்திருக்கிறார்கள். காப்புரிமை சட்டத்தின்படி அப்படி செய்யக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்கள்.
இன்று மதியம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் படத்தின் தயாரிப்பாளரோ அல்லது இயக்குனரோ இளையராஜாவின் நோட்டீஸ் பற்றி பதில் விளக்கம் தருவார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பொனி இசையமைத்து உலகமே வியக்கும் இசையமைப்பாளரான இளையராஜாவுக்கு எந்தவிதமான நன்றியும் தெரிவிக்காமலும், முறையான அனுமதி பெறாமலும் 'குட் பேட் அக்லி'யில் பாடல்களைப் பயன்படுத்தி இருந்தால் அது தவறானது என சமூக வலைதளங்களில் பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.