ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வரும் திரிஷா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். குறிப்பாக, தமிழில் இந்த ஆண்டில் மட்டும் அஜித்துக்கு ஜோடியாக அவர் நடித்து விடாமுயற்சி, குட்பேட் அக்லி என்ற இரண்டு படங்கள் திரைக்கு வந்துள்ளன. அதேபோல் மலையாளத்தில் டொவினோ தாமஸ் உடன் நடித்த ஐடென்டிட்டி என்ற படம் இந்த ஆண்டு ஜனவரியில் திரைக்கு வந்தது.
இந்த நிலையில், தற்போது தனது இணைய பக்கத்தில் அடுத்தடுத்து தனது நடிப்பில் வெளியாகவுள்ள மூன்று படங்களின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் திரிஷா. அதில், தக்லைப், சூர்யா- 45 , விஸ்வாம்பரா போன்ற படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த படங்களில் மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் தக்லைப் படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து, சூர்யா- 45 வது படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்துள்ள விஸ்வாம்பரா இன்னும் இரண்டு மாதங்களில் திரைக்கு வருகிறது. அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டில் மட்டும் திரிஷா கதாநாயகியாக நடித்து இதுவரை மூன்று படங்கள் திரைக்கு வந்துள்ள நிலையில், அடுத்தபடியாக இன்னும் மூன்று படங்கள் திரைக்கு வரப்போகின்றன.