ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

சில நடிகர்கள் சில கேரக்டர்களுக்கு மிகச் சரியான பொருத்தமாக இருந்தால், தொடர்ந்து பெரும்பாலும், அந்த கேரக்டர்களிலேயே அவர்கள் நடிப்பார்கள். குறிப்பாக ரியாஸ்கான் மாதிரியான சிலர் போலீசாகவே நடிப்பார்கள், சிலர் டாக்டராகவே நடிப்பார்கள், சிலர் கல்லூரி ஆசிரியராகவே நடிப்பார்கள்.
இப்படி, தான் நடித்த பெரும்பாலான படங்களில் நாரதராக நடித்தவர் நாகர்கோவில் கே.மகாதேவன். கிட்டத்தட்ட தமிழ் சினிமா மறந்த நடிகர் இவர். அடிப்படையில் எழுத்தாளரான மகாதேவன் நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதி வந்தார். பின்னாளில் நாடக நடிகராக இருந்தார். நாடகங்களிலும் நாரதர் வேடத்தில் நடித்தார்.
'பக்த கௌரி' என்ற படத்தில் அறிமுகமான இவர் சினிமாவிலும் நாரதராகவே நடித்தார். கங்காவதார், பிரபாவதி, ஸ்ரீவள்ளி, ஏகம்பவாணன், சக்ரதாரி, காமவல்லி, ஸ்ரீகிருஷ்ணா துலாபாரம், பாரிஜாதம் உள்ளிட்டவை அவர் நடித்த முக்கியமான படங்கள்.
நாரதராக அதிக படங்களில் நடித்ததால் நாகர்கோவில் மகாதேவன் என்ற அவரது பெயர் நாளடைவில் 'நாரதர் மகாதேவன்' என்று மாறியது. 'என் மனைவி' என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நாயகனாக நடித்தார்.