'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா |

சினிமா இயக்குனராக இருந்த சீமான் அரசியல் களத்திற்கு சென்ற பின் படங்களை இயக்கவில்லை. இருப்பினும் அவ்வப்போது சில படங்களில் நடிக்க மட்டும் செய்கிறார். அது சமயங்களில் சிறப்பு வேடங்களாகவும் இருக்கும் அல்லது படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களாக இருக்கும். தற்போது தர்மயுத்தம் என்ற படத்தில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் ஆர்கே சுரேஷ், அனு சித்தாரா, இளவரசு, எம்எஸ் பாஸ்கர் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதை ஆர் சுப்ரமணியன் இயக்க, விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஆதம் பாவா தயாரித்துள்ளார்.
இதுபற்றி தயாரிப்பாளர் ஆதம் பாவா நமக்கு அளித்த பேட்டியில், ‛‛இது ஒரு கிரைம் திரில்லர் கதை. சேவற்கொடி படத்தை இயக்கிய சுப்ரமணியன் இயக்குகிறார். போலீஸ் உதவி கமிஷனராக சீமான் வருகிறார். தீர விசாரிப்பதே மெய் என படத்தின் தலைப்பில் அடைமொழி கொடுத்துள்ளோம். அது தான் படத்தின் அடிநாதம். படத்தில் ஒரு துளி கூட அரசியல் இருக்காது. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இன்னும் தேதி முடிவாகவில்லை, விரைவில் அறிவிப்பு வரும்'' என தெரிவித்தார்.
இதே தலைப்பில் 1979ல் ரஜினி, ஸ்ரீதேவி நடிப்பில் ஆர்சி சக்தி இயக்கத்தில் தர்மயுத்தம் என்ற படம் வெளிவந்தது. அதே தலைப்பில் இப்போது சீமான் படம் தயாராகி வருகிறது.