'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

சென்னையில் நேற்று நடந்த கஜானா பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில், ‛‛இந்த படத்தில் நடித்த யோகிபாபு பட பிரொமோஷன் நிகழ்ச்சிக்கு வர மறுக்கிறார். அதற்கு தனியாக 7 லட்சம் கேட்கிறார். இது தவறு. அவர் நடிக்க லாயக்கு அற்றவர், இது மோசமான செயல்" என தயாரிப்பாளர் ராஜா என்பவர் குற்றம் சாட்டினார்.
ஆனால் யோகிபாபு தரப்போ "அந்த படத்தின் தயாரிப்பாளர் சாம் என்பவர். இவர் யார் என்றே தெரியாது. பல ஆண்டுகளாக இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. யோகிபாபு அவ்வளவு பிசியாக இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு ஊரில் நடித்து வருகிறார். இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு சென்றால் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புக்கு பாதிப்பு வரும். அதனால் பல லட்சம் இழப்பை தயாரிப்பாளர் சந்திக்க நேரிடும். இதை மற்ற படக்குழுவினர் புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் முடிந்தவரை தான் நடிக்கும் பட நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார்" என்கிறது.