ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மே 1ம் தேதி வெளியான படம் 'ரெட்ரோ'. விமர்சன ரீதியாக படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்களிடத்தில் படம் பற்றிய 'டிரோல்'கள்தான் அதிகம் வந்தது.
'கன்னிமா' பாடல் இப்படத்திற்கு மிகப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. அதுதான் படத்திற்கு ஒரு ஈர்ப்பையும் தந்தது. அதை வைத்து படம் பார்க்கச் சென்ற ரசிகர்கள் என்னவென்றே சொல்ல முடியாத ஒரு குழப்பமான படத்தைத்தான் பார்த்தனர் என்பது தியேட்டர் வட்டார வீடியோக்களிலிருந்து புரிந்தது. அவ்வளவு மோசமான படமாக இல்லை என்றாலும், இந்தப் படத்தை கொண்டு போய் சேர்க்கும் விதத்தில் கொண்டு போனால் இந்த விடுமுறை நாளில் கூடுதல் வசூலைப் பார்க்கலாம்.
ஆனால், படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், இரண்டே நாளில் இப்படத்திற்கு சிம்பிளாக ஒரு முடிவுரையை எழுதிவிட்டாரோ என்றுதான் தோன்றுகிறது. எக்ஸ் தளத்தில், “தியேட்டர்களில் உரத்த ஆரவாரம், கைதட்டல், நிறைவான அன்பு ஆகியவற்றை எங்களுக்கு வழங்கிய ஒவ்வொரு பார்வையாளருக்கும் எங்கள் இதயங்களின் அடிப்பகுதியில் இருந்து நன்றி.
இது நல்ல காலத்தின் ஆரம்பம் என்று எனக்குத் தெரியும். ஆனால், நான் உண்மையிலே மிகவும் மகிழ்ச்சியடைந்ததால் இதைச் சொல்ல வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'தேங்க் யூ' என்ற போஸ்டருன் அவர் இதைப் பதிவிட்டுள்ளதால், இதற்கு மேல் 'ரெட்ரோ' பற்றி எந்த ஒரு பதிவும் போட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
'டூரிஸ்ட் பேமிலி' படத்தை வெளியீட்டிற்குப் பிறகும் புரமோஷன் செய்ய அப்படக் குழுவினர் கோயம்பத்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்றுள்ளனர். 'ஹிட் 3' படத்தை புரமோஷன் செய்ய நாயகன் நானி, நாயகி ஸ்ரீநிதி அமெரிக்கா வரை போய் உள்ளனர். ஆனால், 'ரெட்ரோ' படத்தின் இயக்குனர் எக்ஸ் தளத்தில் நன்றி சொல்லியுள்ளார். படத்தின் நாயகன் மும்பை வீட்டிற்குச் சென்றுவிட்டார். வெளியீட்டிற்குப் பிறகான புரமோஷன்களில் இப்படக்குழுவினர் ஈடுபாடு காட்டாதது ஆச்சரியமாக உள்ளது.