ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்திய சினிமாவின் பெரிய ஆளுமை சாந்தாராம். ஹிந்தி மற்றும் மராட்டிய மொழிகளில் பிரமாண்ட படங்களை தயாரித்தார், இயக்கினார். தமிழில் 'சீதா கல்யாணம்' என்ற படத்தை தயாரித்தார். இவர் இயக்கிய பிரமாண்ட ஹிந்திப் படமான 'அப்னா தேஷ்' என்ற படம் 'நம் நாடு' என்ற பெயரில் தமிழில் வெளியானது.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் பின்னணியில், உருவான படம். சுதந்திரம் அடைந்த பின் இந்தியா எதிர்கொண்ட பிரச்னைகளை இந்தப் படம் பேசியது. அப்போது பிரபல பாடகியாக இருந்த புஷ்பா ஹன்ஸ் நாயகியாக நடித்தார். உமேஷ் சர்மா, சந்திரசேகர், கேசவ் ராவ் ததே உட்பட பலர் நடித்த இந்தப் படத்திற்கு புருஷோத்தம் இசை அமைத்தார்.
தமிழ் பதிப்புக்கு ஜி.கோவிந்த ராஜுலு இசை அமைக்க, பாடல்களை ராஜகோபால ஐயர் எழுதினார். 1949ம் ஆண்டு தமிழில் ரிலீஸான இந்த படம் தெலுங்கிலும் வெளியானது. இந்தியா முழுவதும் வரவேற்பை பெற்ற இந்த படம், தமிழில் போதிய வரவேற்பை பெறவில்லை. அறிமுகமில்லாத நடிகர்கள் நடித்திருந்ததும், வட மாநில மக்களின் வாழ்வியலை கொண்டிருந்ததும் படத்தின் தோல்விக்கு காரணம் என்பார்கள்.