சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
2012ல் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான படம் அரவான். இதில் கதாநாயகி தன்ஷிகா தவிர இன்னொரு கதாநாயகியாக மலையாள திரை உலகைச் சேர்ந்த நடிகை அர்ச்சனா கவி நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஞானக்கிறுக்கன் என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்த இவர் பின்னர் மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, ‛நடிகையாக இருந்த தான் கதாசிரியராக உருவெடுத்து ஒரு படத்திற்கான கதையை தயார் செய்து வந்ததாகவும் ஆனால் விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் தனது கனவுக்கு வேட்டு வைத்து விட்டதாகவும்' கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “மோகன்லால் மற்றும் வித்யாபாலன் இருவரும் இணைந்து நடிக்கும் விதமாக ஒரு கதையை உருவாக்கி வந்தேன். எனது கனவு படம் என்று தான் அதை நினைத்தேன். அந்தக் கதை மோகன்லாலுக்கும் ரொம்பவே பிடித்திருந்தது. இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பிற்கு கிளம்பலாம் என்று நினைத்த சமயத்தில்தான் 96 படம் வெளியானது. கிட்டத்தட்ட நான் உருவாக்கி வைத்திருந்த கதையும், இந்த படமும் ஒரே போல இருந்ததால் அப்படியே அந்த கதையை கிடப்பில் போட்டு விட்டேன். என் கனவு அத்துடன் கலைந்து போனது” என்று விரக்தியுடன் கூறியுள்ளார்.