ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
காரைக்குடியில் இருந்த ஏவிஎம் ஸ்டூடியோவை மெய்யப்ப செட்டியார் சென்னைக்கு மாற்றினார். புதிய ஸ்டூடியோவில் தயாராகும் முதல் படத்தை தானே இயக்க விரும்பினார். அப்போது அவர் பா.நீலகண்டன் எழுதிய ஒரு கதையை அங்கீகரித்து அவரையே இயக்க வைக்கலாம் என்று முடிவு செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் தானே அந்த படத்தை இயக்கினார். அந்த படம் 'வாழ்க்கை'.
1939ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான 'பேச்சிலர் மதர்' . அதை தழுவி உருவான ஹிந்தி திரைப்படமான குன்வாரா பாப் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவானது. காதலன் ஏமாற்றி விட்டதால் அவன் மூலம் பிறந்த குழந்தையை பணக்கார பெண்ணான நாயகியின் காரில் அநாதையாக விட்டுச் செல்கிறாள் ஒரு பெண். அந்த குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நாயகிக்கு என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
வைஜெயந்திமாலா, டி.ஆர்.ராமச்சந்திரன், கே.சாரங்கபாணி, எஸ்.வி.சஹஸ்ரநாமம், எம்.எஸ்.திரௌபதி, குளத்து மணி, சுப்பையா, பி.டி.சம்பந்தம், வி.எம்.ஏழுமலை, கே.என்.கமலம், எஸ்.ஆர்.ஜானகி உள்பட பலர் நடித்தனர். ஆர்.சுப்பாராமன் இசை அமைத்திருந்தார்.
இந்த படம் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது, ஒரு வருடத்திற்கு பிறகு கேவா கலருக்கு மாற்றப்பட்டு வெளியானது. 'ஜீவிதம்' என்ற பெயரில் தெலுங்கிலும், 'பாஹர்' என்ற பெயரில் ஹிந்தியிலும் ரீ மேக் ஆனது. வைஜயந்திமாலா இந்த படத்தின் மூலம் புகழ்பெற்றார்.