டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

பாரதிராஜா சினிமா வாய்ப்புகள் தேடிக் கொண்டிருந்தபோது அவர் ஜெயலலிதாவை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று நினைத்தார். இதற்காக ஆர்.செல்வராஜ் எழுதிய சொந்த வீடு என்று கதையை வைத்திருந்தார். அதை ஜெயலலிதாவிடம் கூறி ஒப்புதலும் வாங்கி வைத்திருந்தார். மதிக்காத கணவனை எதிர்த்து ஜெயிக்கும் ஒரு பெண்ணின் கதை இது. இதில் கணவனாக முத்துராமனும், புரட்சிக்கார மனைவியாக ஜெயலலிதாவும் நடிப்பதாக இருந்தது. ஆனால் இந்த திட்டம் ஏனோ கைவிடப்பட்டது.
பாரதிராஜவை வைத்து ஒரு படம் தயாரிக்க ஏவிஎம் விரும்பியது. பல வருடங்களுக்கு பிறகு இது கைகூடியது. ஜெயலலிதாவிற்காக வைத்திருந்த கதையை 'புதுமைப்பெண்' என்ற பெயரில் ஏவிஎம்மிற்காக இயக்கினார். இதில் ஜெயலலிதா நடிப்பதாக இருந்த கேரக்டரில் ரேவதி நடித்தார். முத்துராமன் நடிக்க இருந்த கேரக்டரில் பாண்டியன் நடித்தார்.
பொதுவாக ஏவிஎம் தயாரிக்கும் படங்களின் தலைப்புக்கு முன்னால் 'ஏவிஎம்மின்' என்ற சொல் இடம்பெறும், பாரதிராஜா தான் இயக்கும் படங்களின் தலைப்புக்கு முன்னால் 'பாரதிராஜாவின்' என்று குறிப்பிடுவார். இந்த படத்திற்கு யார் பெயரை போட்டுக் கொள்வது என்ற பிரச்னை வந்தபோது ஏவிஎம் படைப்பாளியை மதித்து 'பாரதிராஜாவின் கைவண்ணத்தில் ஏவிஎம்மின் புதுமைப்பெண்' என படத் தலைப்பை வெளியிட்டது.