பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தின் பாடல்கள் மேடையில் பாடப்பட்டது. நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், பின்னனிப் பாடகி சின்மயி உள்ளிடோர் மேடையில் பாடினார்கள்.
படத்தில் பிரபல பாடகியான தீ பாடிய 'முத்த மழை' என்ற பாடலை சின்மயி பாடினார். அன்றைய தினம் பாடகி தீ வர முடியாத காரணத்தால் சின்மயியைப் பாட வைத்துள்ளார்கள். அப்பாடலை தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் சின்மயி தான் பாடியுள்ளார்.
இசை வெளியீட்டின் போது மேடை நிகழ்ச்சியில் சின்மயி பாடிய பாடலின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. அவர் பாடியதும் நன்றாக இருக்கிறது, அவரையே பாட வைத்திருக்கலாமே என்ற ரீதியில் கமெண்ட்கள் வந்தது. தமிழில் ஒரிஜனலாகப் பாடிய தீ-யை குறைத்து மதிப்பிடுவது போலவும் ஒப்பிட்ட பல கமெண்ட்கள் வந்தன. தமிழில் பாடலைப் பாடுவதற்கு சின்மயிக்கு தடை விதிக்கப்பட்டதுதான் அதற்குக் காரணம் என்ற சர்ச்சையும் கூடவே எழுந்தது.
இந்நிலையில் இப்படி ஒரு சர்ச்சை தேவையற்று உருவாக்கப்படுவதாக மணிரத்னம் கோபப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே, கர்நாடகாவில் கமல் பேசிய பேச்சால் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த சர்ச்சையையும் எதற்கு என அவர் கேட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.