தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சமீபகாலமாக ஏஐ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரைப் பிரபலங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து வருகிறார்கள். பாடகி சின்மயின் புகைப்படங்களையும் யாரோ விஷமிகள் மார்பிங் செய்து வெளியிட்டுள்ளார்கள். அது குறித்த ஸ்கிரீன் ஷாட்டை அவர் வெளியிட்டுள்ளார். அதோடு அருவருக்கத்தக்க கருத்துக்களை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள காணொளியில், பெண்கள் எப்போதுமே ஆண்களுக்கு அடங்கி போக வேண்டும் என்று ஆணாதிக்க சமூகம் நினைக்கிறது. அப்படி அடங்கி போகாத பெண்களும், பெண் குழந்தைகளும் செத்துப் போகலாம் என்று இந்த குரூர புத்தி உடையவர்கள் பதிவு போடுகிறார்கள். எதிர்த்து பேசும் பெண்களை ஏதாவது ஒரு வகையில் இது போன்று இழிவுபடுத்துகிறார்கள். முன்பெல்லாம் பெண்களை பேய் பிடித்தவள், வசியம் செய்தவள் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மார்பிங் புகைப்படங்களை வெளியிடுகிறார்கள். இது போன்ற அயோக்கியர்களுக்கு இதை தவிர வேறு எதுவும் தெரியாது என்று ஆவேசமாக பேசி உள்ளார் பாடகி சின்மயி.