உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் |

அந்தக் காலத்தில் நடிகையான சிலர் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்பு ஹீரோயின் ஆனார்கள். அப்படி அவர்கள் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும்போது சிறுவனாக நடித்தது உண்டு. ஆனால் ஹீரோயின் ஆகும் வயதில் ஆணாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் விஜய நிர்மலா.
ஆந்திராவை சேர்ந்த அவர் சென்னை, நசரத்பேட்டையில்தான் பிறந்து வளர்ந்தார். முறைப்படி நடனம் கற்று நடிப்பு வாய்ப்பு தேடியபோது அவருக்கு முதன் முதலாக அமைந்த படம் 'மச்சரேகை'. இந்த படத்தில் கதையின் நாயகனாக அதாவது மச்ச ராஜாவாக டி.ஆர்.மகாலிங்கம் நடித்தார். அவரது இளமை பருவ காட்சிகளில், அதாவது இளம் மச்ச ராஜாவாக நடித்தவர் விஜய நிர்மலா. ஒரு சில காட்சிகளில் மட்டும் நடிக்காமல் சுமார் 30 நிமிட காட்சிகளில் அவர் மச்ச ராஜாவாக நடித்தார்.
மச்சராஜா ஜோடியாக முதலில் அஞ்சலிதேவி நடித்தார். பின்னர் என்ன காரணத்தாலோ அவர் விலகிக் கொள்ள அந்த கேரக்டரில் எஸ்.வரலட்சுமி நடித்தார். 'மச்சரேகை' என்பது தஞ்சை ராமய்யாதாஸ் எழுதி நடத்தி வந்த ஒரு நாடகம். இந்த நாடகத்தை பார்த்த டி.ஆர்.மகாலிங்கம் அதனை திரைப்படமாக்க விரும்பினார். அவரே தயாரித்து, நடித்தார். அவருடன் பி.ஆர்.பந்தலு, குமாரி கமலா, சி.டி.ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பி.புல்லையா இயக்கினார், சி.ஆர்.சுப்பாராமன் இசை அமைத்திருந்தார். 1950ம் ஆண்டு படம் வெளியானது.
விஜய நிர்மலா பிற்காலத்தில் 100க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்தார். 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார்.