பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் |
அந்தக் காலத்தில் நடிகையான சிலர் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்பு ஹீரோயின் ஆனார்கள். அப்படி அவர்கள் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும்போது சிறுவனாக நடித்தது உண்டு. ஆனால் ஹீரோயின் ஆகும் வயதில் ஆணாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் விஜய நிர்மலா.
ஆந்திராவை சேர்ந்த அவர் சென்னை, நசரத்பேட்டையில்தான் பிறந்து வளர்ந்தார். முறைப்படி நடனம் கற்று நடிப்பு வாய்ப்பு தேடியபோது அவருக்கு முதன் முதலாக அமைந்த படம் 'மச்சரேகை'. இந்த படத்தில் கதையின் நாயகனாக அதாவது மச்ச ராஜாவாக டி.ஆர்.மகாலிங்கம் நடித்தார். அவரது இளமை பருவ காட்சிகளில், அதாவது இளம் மச்ச ராஜாவாக நடித்தவர் விஜய நிர்மலா. ஒரு சில காட்சிகளில் மட்டும் நடிக்காமல் சுமார் 30 நிமிட காட்சிகளில் அவர் மச்ச ராஜாவாக நடித்தார்.
மச்சராஜா ஜோடியாக முதலில் அஞ்சலிதேவி நடித்தார். பின்னர் என்ன காரணத்தாலோ அவர் விலகிக் கொள்ள அந்த கேரக்டரில் எஸ்.வரலட்சுமி நடித்தார். 'மச்சரேகை' என்பது தஞ்சை ராமய்யாதாஸ் எழுதி நடத்தி வந்த ஒரு நாடகம். இந்த நாடகத்தை பார்த்த டி.ஆர்.மகாலிங்கம் அதனை திரைப்படமாக்க விரும்பினார். அவரே தயாரித்து, நடித்தார். அவருடன் பி.ஆர்.பந்தலு, குமாரி கமலா, சி.டி.ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பி.புல்லையா இயக்கினார், சி.ஆர்.சுப்பாராமன் இசை அமைத்திருந்தார். 1950ம் ஆண்டு படம் வெளியானது.
விஜய நிர்மலா பிற்காலத்தில் 100க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்தார். 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கினார்.