மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் |
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் பூர்ணிமா பாக்யராஜ், அவர் மகன் சாந்தனு ஆகியோர் சந்தித்து பேசியிருக்கின்றனர். அடுத்தடுத்து இரண்டு பெரிய நடிகர்களை அம்மாவும், மகனும் சந்திக்க என்ன காரணம் என்று விசாரித்தால் இயக்குனர் கே. பாக்யராஜ் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகப்போகிறது. அதை முன்னிட்டு அவருக்கு பெரிய பாராட்டு விழா நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. ரஜினி, கமல் இல்லாமல் தமிழ் சினிமாவில் பாராட்டு விழாவா? தவிர, பாக்யராஜ், பூர்ணிமாவுடன் இரண்டு பேரும் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். அந்த நட்பின் அடிப்பையில் நேரில் போய் அழைப்பு விடுத்ததாக தகவல்.
அந்த விழாவில் பாக்யராஜ் டீமில் பணியாற்றவர்கள், அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், அவரின் நண்பர்கள் என பலர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அனைத்து ஏற்பாடுகளும் முடிந்தவுடன் இன்னும் சில மாதங்களில் அந்த பாராட்டு விழா நடக்க உள்ளது. பாக்யராஜ் நடித்த 'சுவர் இல்லாத சித்திரங்கள்' 1979ல் வெளியானது. ஆனால், '16 வயதினிலே' காலத்திலேயே இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக அவர் வேலை செய்து இருக்கிறார் பாக்யராஜ். அதற்கு முன்பும் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து இருக்கிறார். அந்தவகையில் சினிமாவில் 50வது ஆண்டை தொட்டுவிட்டார்.