'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் பூர்ணிமா பாக்யராஜ், அவர் மகன் சாந்தனு ஆகியோர் சந்தித்து பேசியிருக்கின்றனர். அடுத்தடுத்து இரண்டு பெரிய நடிகர்களை அம்மாவும், மகனும் சந்திக்க என்ன காரணம் என்று விசாரித்தால் இயக்குனர் கே. பாக்யராஜ் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகப்போகிறது. அதை முன்னிட்டு அவருக்கு பெரிய பாராட்டு விழா நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. ரஜினி, கமல் இல்லாமல் தமிழ் சினிமாவில் பாராட்டு விழாவா? தவிர, பாக்யராஜ், பூர்ணிமாவுடன் இரண்டு பேரும் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். அந்த நட்பின் அடிப்பையில் நேரில் போய் அழைப்பு விடுத்ததாக தகவல்.
அந்த விழாவில் பாக்யராஜ் டீமில் பணியாற்றவர்கள், அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், அவரின் நண்பர்கள் என பலர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அனைத்து ஏற்பாடுகளும் முடிந்தவுடன் இன்னும் சில மாதங்களில் அந்த பாராட்டு விழா நடக்க உள்ளது. பாக்யராஜ் நடித்த 'சுவர் இல்லாத சித்திரங்கள்' 1979ல் வெளியானது. ஆனால், '16 வயதினிலே' காலத்திலேயே இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக அவர் வேலை செய்து இருக்கிறார் பாக்யராஜ். அதற்கு முன்பும் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து இருக்கிறார். அந்தவகையில் சினிமாவில் 50வது ஆண்டை தொட்டுவிட்டார்.