தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா என தமிழ் சினிமாவின் டாப் கலைஞர்கள் இருந்தும் அப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. வசூலிலும் கூட படம் பெரிய ஏமாற்றத்தைத் தந்தது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பட வெளியீட்டிற்கு முன்பாக, இப்படம் மீதான நம்பிக்கையில் படத்தை ஓடிடியில் வெளியிட எட்டு வாரங்களுக்குப் பிறகே ஒப்பந்தம் செய்தனர். வட இந்தியாவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படத்தைத் திரையிட எட்டு வார ஓடிடி இடைவெளி அவசியம். வழக்கம் போல நான்கு வாரங்களில் வெளியிடும் ஒப்பந்தம் இருந்தால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படத்தைத் திரையிட முடியாது.
படம் ஒரு வாரமே தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் தற்போது ஓடிடி வெளியீட்டை நான்கு வாரங்களில் வெளியிடவும், முன்னர் செய்த ஒப்பந்தப்படியான விலையைக் குறைக்கவும் ஓடிடி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 25 சதவீதம் வரை விலையைக் குறைக்கும்படியான பேச்சு நடந்து வருகிறதாம். விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம்.