பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா என தமிழ் சினிமாவின் டாப் கலைஞர்கள் இருந்தும் அப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. வசூலிலும் கூட படம் பெரிய ஏமாற்றத்தைத் தந்தது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பட வெளியீட்டிற்கு முன்பாக, இப்படம் மீதான நம்பிக்கையில் படத்தை ஓடிடியில் வெளியிட எட்டு வாரங்களுக்குப் பிறகே ஒப்பந்தம் செய்தனர். வட இந்தியாவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படத்தைத் திரையிட எட்டு வார ஓடிடி இடைவெளி அவசியம். வழக்கம் போல நான்கு வாரங்களில் வெளியிடும் ஒப்பந்தம் இருந்தால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படத்தைத் திரையிட முடியாது.
படம் ஒரு வாரமே தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் தற்போது ஓடிடி வெளியீட்டை நான்கு வாரங்களில் வெளியிடவும், முன்னர் செய்த ஒப்பந்தப்படியான விலையைக் குறைக்கவும் ஓடிடி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 25 சதவீதம் வரை விலையைக் குறைக்கும்படியான பேச்சு நடந்து வருகிறதாம். விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம்.