திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சின்னத் திரையில் 'கனா காணும் காலங்கள்' தொடரின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஶ்ரீ. அதன் பின்னர் 'வழக்கு எண் 18/9', 'மாநகரம்', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'வில் அம்பு' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமான நடிகராக மாறினார். கடைசியாக 2023ம் ஆண்டில் வெளியான 'இறுகப்பற்று' படத்தில் ஸ்ரீ நடித்திருந்தார்.
சமீபத்தில் நடிகர் ஶ்ரீயின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலானது. அந்தப் புகைப்படத்தில் முடியின் நிறத்தை மாற்றி, உடல் மெலிந்து காணப்பட்டார்.
இந்த நிலையில், நடிகர் ஶ்ரீ, 'MAY EYE COME IN?' என்கிற ஆங்கில நாவலை எழுதியிருப்பதாக அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, "18 ஜூன் 2025, புதன்கிழமை எனது முதல் ஆங்கில நாவலான "MAY EYE COME IN?"-ஐ உலகிற்குப் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி. "AMAZON.IN"- தளத்தில் உள்ளது. உங்கள் பிரதிகளை இப்போதே பெறுங்கள்" எனப் பதிவிட்டிருக்கிறார்.