ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் |
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டது, கோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மலையாளம், தெலுங்கு, ஹிந்தி பட உலகில் கேள்விப்பட்ட விஷயங்கள் தமிழில் நடப்பது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளாக தமிழ் சினிமா வட்டாரங்களில் பார்ட்டி அதிகமாகிவிட்டது. அதில் சரக்கு தவிர, அதிக போதையை ஏற்படுத்த சில விஷயங்கள் உள்ளே வந்தன. சிலர் அதை வியாபாரமாக்கி, பணம் பார்த்தார்கள். அதன்விளைவுதான் போதை நடமாட்டம் வழக்கு. இப்படி பல பார்ட்டிகள் நடந்து வருகின்றன.
ஸ்ரீகாந்த் மட்டுமே சிக்கி இருக்கிறார். விசாரணை தீவிரப்படுத்தப்பட்டால் நேர்மையாக நடந்தால் இன்னும் பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. மலையாள படப்பிடிப்பில் நடிகர்கள் போதை பயன்படுத்தக் கூடாது என்று அங்குள்ள சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. அதேப்போல் தமிழ் சினிமாவிலும் கட்டுப்பாடுகள் வரும் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட பார்ட்டிகளுக்கு சில நடிகர், நடிகைகள் ரெகுலராக செல்வது உண்டாம். அவர்களை, போலீசார் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். அதனால், சில வாரங்கள் கோலிவுட்டில் பார்ட்டி, கொண்டாட்டங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது.