கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
ஓரிரு படங்களில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தாலும் தனது பரபரப்பான பேட்டிகளில் பிரபலமானவர் ஸ்ரீரெட்டி. ஆந்திரா, தமிழ்நாட்டில் உள்ள முக்கிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
ஆனால் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் தான் யு-டியூப்பில் சமையல் நிகழ்ச்சி நடத்தி வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது "சினிமா பாலியல் கொடுமைகளை நான் வெளியே சொன்னபோது, யாருமே எனக்கு ஆதரவு தரவில்லை. சில நடிகைகள் என்னை விமர்சித்தார்கள். ஒரு பார்ட்டியில் எனக்கே வலுக்கட்டாயமாக உதட்டில் 'கொகைன்' தடவி விட்டுள்ளார்கள்.
பல ஆயிரம் கோடி புழங்கும் சினிமா துறையில் நடக்கும் குற்றங்களை வெளியே சொன்னேன். ஆனால் கடைசியில் நான் குற்றவாளியாகி நிற்கிறேன். உண்மையை சொல்லி போராடிய எனக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. எனக்கு அநியாயம் செய்தவர்களை 'கர்மா' இப்போது தண்டனை கொடுத்து கொண்டிருக்கிறது.
சினிமாவில் நடக்கும் அநியாயங்களை தைரியமாக பேசியதால் படவாய்ப்புகள் இல்லாமல் பரிதவித்து நிற்கிறேன். இதனால் நானே ஒரு 'யுடியூப்' சேனல் தொடங்கி சமையல் நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். கவர்ச்சி ஆடை அணிந்து சமையல் நிகழ்ச்சி நடத்துவதாக விமர்சனம் செய்கிறார்கள். எனக்கு வேறு வழியில்லை. எனக்கு பிடிக்காத போதும், கவர்ச்சியை காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். 'யுடியூப்' சேனல் மூலம் கிடைக்கும் வருமானம்தான் இப்போது என்னை வாழ வைக்கிறது" என்கிறார்.