விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" |

கற்றது தமிழ், தங்கமீன்கள், பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் தற்போது திரைக்கு வந்துள்ள படம் பறந்து போ. இதில் மிர்ச்சி சிவா, கிரேஷ் ஆண்டனி, அஞ்சலி, விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் பறந்து போ படம் குறித்து நடிகை நயன்தாரா ஒரு பாராட்டு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், இந்த பரபரப்பான உலகை விட்டு விலகி உண்மையான வாழ்க்கை என்னவென்று உணர விரும்பினால் உங்கள் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு மலை ஏறுங்கள். அப்படி இல்லை என்றால், இயக்குனர் ராமின் பறந்து போ படத்திற்கு அவர்களை கூட்டிச் செல்லுங்கள். காரணம் இந்த படம் நமக்கு வாழ்க்கையில் என்ன தேவை, எதை இழக்கிறோம் என்பதை அழகாக சொல்கிறது. நான் இதுவரை பார்த்த படங்களில் இது ஒரு இனிமையான படம். இயக்குனர் ராமிற்கும் அவரது பட குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார் நயன்தாரா.
பறந்து போ படம் திரைக்கு வந்து நான்கு நாட்களில் இதுவரை ரூ.4.1 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.