கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
சூப்பர் குட் நிறுவனத்தை 1990ல் தொடங்கினார் ஆர்.பி.சவுத்ரி. புதுவசந்தம் தொடங்கி ஏகப்பட்ட படங்களை தயாரித்தார். அவர் தமிழராக இல்லாவிட்டாலும், தமிழில் அதிக புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் என்ற பெருமையை பெற்றார். இப்போது ரவி அரசு இயக்கத்தில் விஷால், துஷாரா விஜயன் நடிக்கும் படம், சூப்பர் குட் நிறுவனத்தின் 99வது படம்.
இந்நிலையில், பலருக்கும் எழுகிற கேள்வி, இந்த நிறுவனத்தின் 100வது படத்தை இயக்குவது யார்? தயாரிப்பது யார் என்பதுதான். சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் குட் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்பட்டது. அதை ஆர்.பி.சவுத்ரி மகனான ஜீவாவும் உறுதிப்படுத்துவது போல பேசி வந்தார். ஆனால், விஜய் சம்பளத்தை கேட்ட ஆர்.பி.சவுத்ரி, அந்த தொகை கொடுத்தால் நஷ்டம் உறுதி, அவர் கால்ஷீட் வேண்டாம் என சொல்லிவிட்டாராம். விஜயும் வேறு தயாரிப்பாளர் பக்கம் போய் விட்டார். இப்போது 100வது படத்தில் நடிப்பது யார் என்பது கேள்வியாக இருக்கிறது. தமிழில் மார்டன் தியேட்டர்ஸ், ஏவிஎம் போன்ற சில நிறுவனங்களே 100 படங்களை தயாரித்து இருக்கின்றன. அந்த பெருமையை விரைவில் சூப்பர் குட் பெற உள்ளது.