வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
சென்னையில் இன்று நடந்த பிளாக் மெயில் பட விழாவில் சிறப்பு விருந்திரனாக கலந்து கொண்டார் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன். காரணம், படத்தில் ஹீரோவாக நடித்தவர் அவர் நண்பர் ஜி.வி.பிரகாஷ். கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கி இருக்கிறார்.
படவிழாவில் ஆதிக் பேசுகையில் ''என்னை திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனர் ஆக்கியவர் ஜி.வி.பிரகாஷ். பல ஆண்டுகளாக எங்கள் நட்பு தொடர்கிறது. இந்த படத்தின் கதை வித்தியாசமானது. இந்த பட இயக்குனர் மாறன் இரவு காட்சிகளை அதிகம் ரசித்து எடுப்பவர். ஆனால், ஹீரோ ஜி.வி.பிரகாசுக்கு இரவு பிடிக்காது. அவர் லைட் போட்டுக் கொண்டுதான் துாங்குவார். அவர் இந்த படத்துக்குபின் மாறியிருப்பார் என நினைக்கிறேன் என்றார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் ''அடுத்து அஜித்தை வைத்து படம் இயக்குவது உறுதி. அது குட் பேட் அக்லி மாதிரி இருக்காது, வேறு ஜானரில் இருக்கும். விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு , அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும்' என்றார்.
ஹீரோயின், தயாரிப்பாளர் குறித்து ஆதிக் சொல்லவில்லை. ஆனாலும், ரோமியோ பிக்சர் ராகுல் தயாரிப்பதாக கூறப்படுகிறது.