உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் |

வட இந்திய சினிமாவில் எப்போதும் இஸ்லாமிய கலைஞர்களின் ஆதிக்கம் இருக்கும். தமிழ் சினிமாவில் அது குறைவு. தற்போதைய காலகட்டத்தில்கூட அமீர், மீரா கதிரவன், ராஜ்கிரண் மாதிரி ஒரு சிலரே உள்ளனர்.
தமிழ் சினிமாவில் முதன் முதலாக வந்த இஸ்லாமிய இயக்குனர், தயாரிப்பாளர் என்று எப்.நாகூரை குறிப்பிடலாம். இவரது பூர்வீகம் இலங்கை என்றும் இவரது குடும்பத்தினர் நாகூரில் குடியேறியவர்கள் என்றும் கூறுவார்கள். 1950 முதல் 1960 வரை தமிழ் சினிமாவில் பல வடிவங்களில் இருந்துள்ளார். தயாரிப்பாளராக, இயக்குனராக, பைனான்சியராக இருந்துள்ளார்.
எம்ஜிஆர் முதன் முறையாக மலையாளத்தில் நடித்த படம் 'ஜெனோவா'. அந்த படத்தை இயக்கியது எப்.நாகூர்தான். நேரடியாக மலையாளத்தில் தயாரித்து, தமிழில் டப் செய்யப்பட்ட படம். இதுதவிர 'நாம் இருவர், கீதா, ராஜாம்பாள், சந்ததி, அம்பிகாபதி, லைலா மஜ்னு' உள்ளிட்ட படங்களையும், சில தெலுங்கு படங்களையும் இயக்கி உள்ளார். இவரைப் பற்றிய அதிகப்படியான மேல் விபரங்களோ, புகைப்படமோ கிடைக்கவில்லை, என்கிறார்கள் சினிமா வரலாற்று ஆசிரியர்கள்.