வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் மதராஸி. சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால், பிஜூ மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார். செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியாகிறது.
படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருப்பதாவது: சினிமா என்பது 100 சதவிகிதம் பொழுதுபோக்கும் விஷயம்தான். இப்போதல்லாம் சினிமாவில் யாரும் அட்வைஸ் பண்ணுவதை விரும்புவதில்லை. செல்போனில் அட்வைஸ் கொட்டுகிறது. அதை செய், இதை செய்யாதே என்று சொன்னால் யாருக்கும் பிடிக்காது. அதுதான் நமக்கு தெரியுமா இதை ஏன் சினிமாவில் சொல்கிறார்கள் என்று தான் மக்கள் நினைக்கிறார்கள்.
ஆனாலும் சினிமாவில் தப்பான கருத்தை சொல்லிவிடக்கூடாது அதில் நான் உறுதியாக இருக்கிறேன். பொழுதுபோக்கை சினிமாவில் எவ்வளவு அழகாக சொல்ல வேண்டும், ஆழமாக சொல்ல வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். வெறும் அறிவுரை மட்டும் சொன்னால், ஆடியன்ஸ் தியேட்டரை விட்டு வெளியே சென்று விடுவார்கள். நம்ம ஊர்ல பிரசாதம்கூட இனிப்பா இருந்தாதான் சாப்பிடுவாங்க.
சிவகார்த்திகேயன் எந்த பின்னணியும் இல்லாமல் கடுமையாக உழைத்து முன்னேறியவர். இப்போது அவரை வைத்து நான் இயக்கி உள்ள 'மதராஸி' படம் 'கஜினி' மாதிரியான திரைக்கதையும், 'துப்பாக்கி' மாதிரியான ஆக்ஷனும் கொண்டதாக இருக்கும். முடிந்தவரை அதை அடைந்திருப்பதாக நினைக்கிறேன். என்றார்.