படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

கடந்த 1998ல் மலையாளத்தில் வெளியான படம் சம்மர் இன் பெத்லகேம். சுரேஷ்கோபி, ஜெயராம், மஞ்சு வாரியர் நடித்திருந்த இந்த படத்தில் மோகன்லால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கலகலப்பான ஒரு காதல் கதையாக உருவாகி இருந்த இந்த படத்தை சிபி மலயில் இயக்கியிருந்தார். பிரபல இயக்குனர் ரஞ்சித் கதை எழுதியிருந்தார். படத்தை கோக்கர் பிலிம்ஸ் சார்பாக சியாத் கோக்கர் என்பவர் தயாரித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இயக்குனர் சிபி மலயில், கதாசிரியர் ரஞ்சித், தயாரிப்பாளர் சியாத் கோக்கர் மூவரும் 27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்திற்காக ஒன்றிணைந்துள்ளார்கள்.
இதுகுறித்த ஒரு அறிவிப்பை '27 வருடங்களுக்கு பிறகு' என்கிற ஒரு புதிய போஸ்டருடன் வெளியேற்றி உள்ளார்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட சம்மர் இன் பெத்லகேம் படத்தின் தயாரிப்பாளர் சியாத் கோக்கர் பேசும்போது அதன் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பேச்சு போய்க் கொண்டு இருக்கிறது என்று சொல்லி இருந்தார். ஒருவேளை அந்த இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பாகத்தான் இது இருக்குமோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.