வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

ஏஐ தொழில்நுட்டம் தற்போது சினிமாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 'நைசா' என்ற முதல் ஏஐ தொழில்நுட்ப படம் சமீபத்தில் வெளியானது. கன்னடத்தில் ஒரு படம் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் பாலிவுட் தயாரிப்பாளர் விக்ரம் மல்கோத்ரா 'சிரஞ்சீவி அனுமன்' என்ற ஏஐ தொழில்நுட்ப படத்தை தயாரிக்க போவதாக அறிவித்துள்ளார். இதற்கு பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஏ.ஐ. தொழில்நுட்ப திரைப்படங்கள் எதிர்காலத்தில், சினிமாவில் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும். திறமையான கலைஞர்களை இழக்கும் சூழல் வந்துவிடும். இப்படிப்பட்ட ஏ.ஐ. திரைப்படங்கள் கலைஞர்களை புறக்கணித்து, அவர்களை வெறும் கூலிக்கு வேலை செய்யும் வேலைக்காரர்களாக மாற்றுவதற்கு வழிவகுக்கும்.
இதை எதிர்க்கும் வகையில், ஏஐ படங்களை விட்டு நடிகர்கள் வெளியேற வேண்டும். கலைஞர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பதுதான் இதுபோன்ற நிறுவனங்களின் பணி. ஆனால் தற்போது அவர்களின் இலக்கு பணத்தின் மீது மட்டும்தான் உள்ளது. என்று கூறியிருக்கிறார்.