பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைவது உறுதியாகிவிட்டது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுவிட்டார் கமல்ஹாசன். இன்னமும் முதற்கட்ட பணிகள் தொடங்கப்படவில்லை. அவ்வப்போது கமலிடம் மட்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசி வருவதாக தகவல்.
இந்நிலையில், ரஜினி, கமல் இணையும் படமும் தாதாயிசம் பேக்கிரவுண்டில் உருவாக உள்ளது. ரஜினி, கமல் இருவருமே தாதாக்கள். ஆனால், அவர்கள் ஒரு காலத்தில் நண்பர்கள். பின்னே ஏன் பிரிந்தார்கள். எதற்காக சண்டை போடுகிறார்கள் என்பது கதை என கோலிவுட்டில் ஒரு புதுக்கதை உலா வருகிறது.
ஆனால், படக்குழுவோ இது தவறு. இன்னும் இது போல நுாற்றுக்கணக்கான கதைகள் வரலாம். ரஜினி, கமல் இணையும் படம் என்பதால் யாரும் எதிர்பாராதவகையில் மிரட்டலாக இருக்கும். அதேசமயம், லோகேஷ் பாணியில் வன்முறை, ரத்தம், தாதாயிசம், கடத்தல் விஷயங்களும் இருக்க வாய்ப்பு என்கிறார்கள்.
இதற்கிடையில், ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, கமல் மகள் ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் ஆகியோரும் சினிமாத்துறையில் இருப்பதால், அந்த படத்தில் தங்களின் பங்கு இருக்க வேண்டும். ஏதாவது ஒருவகையில் அந்த படத்துடன் இணைந்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களாம். படத்துக்கு இசை அனிருத் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.