'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

'ரெட்ரோ' படத்தை அடுத்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த முடித்துள்ள படம் 'கருப்பு'. அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகிறது. இதே நாளில் சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இவர்கள் கூட்டணியில் உருவாகி நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த 'மத கஜ ராஜா' படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில் கார்த்தியை வைத்து தான் இயக்கவிருந்த படம் கைவிடப்பட்டதால் அவருக்கு பதிலாக அடுத்து விஷாலை இயக்கப் போகிறார் சுந்தர்.சி. இந்த படத்தை மூன்றே மாதங்களில் முடித்து அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் திரைக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. தற்போது நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் -2' படம் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதால் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் நவம்பர் மாதம் விஷால் நடிக்கும் புதிய படத்தை தொடங்குகிறார் சுந்தர்.சி.