டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

நடிகர் சந்தானம் தமிழில் தொடர்ந்து கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு சில படங்கள் வெற்றி பெறுகிறது. ஒரு சில படங்கள் தோல்வியை தழுவியது. தற்போது அடுத்து சந்தானம் புதிதாக ஒரு கிரைம், திரில்லர் ஜானரில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு திரைக்கதை எழுதுவதற்காக சந்தானம் சமீபத்தில் பிரபல கிரைம், திரில்லர் எழுத்தாளர் ஆன ராஜேஷ் குமாரை சந்தித்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே ராஜேஷ் குமார் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு குற்றம் 23, அக்னி தேவி, யுத்த சத்தம் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. இவர் சரத்குமாரின் 'சண்டமாருதம்' படத்திற்கு திரைக்கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.