படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

மலையாள திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான மஞ்சு வாரியர் கடந்த சில வருடங்களாக தமிழிலும் அடியெடுத்து வைத்து, தனுஷ், அஜித், ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களில் நடித்தார். அதிலும் 'அசுரன்' பார்த்த தமிழ் ரசிகர்கள் பலரும் இவர் நீண்ட நாட்களுக்கு முன்பே தமிழ் சினிமாவிற்கு வந்திருக்கக் கூடாதா என்பது போன்று தங்களது ஆதங்கத்தை எழுப்பினார்கள்..
அதேசமயம் 1998லேயே நடிகை மஞ்சு வாரியர் பிரபுவுக்கு ஜோடியாக தமிழில் ஒரு படத்தில் நடித்தார் என்பதும் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது என்கிற ஆச்சரிய தகவலும் சமீபத்தில் மஞ்சுவாரியரின் ஒரு பேட்டி மூலம் வெளியாகி உள்ளது.
1998ல் ஜெயராம், சுரேஷ் கோபி நடிப்பில் இயக்குனர் சிபி மலயில் டைரக்ஷனில் உருவான 'சம்மர் இன் பெத்லகேம்' திரைப்படம், வரும் டிசம்பர் 12ம் தேதி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். மோகன்லால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சியில் மஞ்சு வாரியர் பேசும்போது, “ஆரம்பத்தில் இந்த படம் தமிழில் உருவாவதாக தான் ஆரம்பிக்கப்பட்டது. நடிகர் பிரபுவுடன் இணைந்து எனக்கு ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை அந்த படம் அத்துடன் கைவிடப்பட்டது. பின்னர் இயக்குனர் சிபி மலயில் மற்றும் கதாசிரியர் ரஞ்சித் இருவரும் இந்த படத்தில் இணைந்து மலையாளத்தில் இதை உருவாக்கினார்கள். இப்போதும் கூட இந்த கதை தமிழுக்காக தான் உருவாக்கப்பட்டதா என்கிற ஆச்சரியம் என்னிடமிருந்து விலகவில்லை” என்று கூறியுள்ளார்.