Advertisement

சிறப்புச்செய்திகள்

பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி

14 டிச, 2025 - 06:08 IST
எழுத்தின் அளவு:
Cinema-on-OTT-only-after-100-days-Theater-Owners-Association-takes-action
Advertisement

திருப்பூர்: ''புதிதாக திரைக்கு வரும் சினிமாக்கள், 100 நாளுக்கு பிறகே, ஓ.டி.டி.,யில் வெளியிட வேண்டும்; இந்த நிபந்தனைக்கு உட்பட்டால் மட்டுமே ஒத்துழைப்பு கொடுப்போம்'' என, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியம் கூறினார்.

@subtitle@அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:@@subtitle@@
தமிழகத்தில், 1,168 சினிமா தியேட்டர்கள் உள்ளன. அதில், 60 சதவீத தியேட்டர்கள் நஷ்டத்தில் ஓடுகின்றன. புதிய படங்கள், தியேட்டர்களில் ரிலீசாகி நான்கு வாரத்தில் ஓ.டி.டி.யில் வெளியாவதால், தியேட்டருக்கு வருவோர் எண்ணிக்கை சரிந்துவிட்டது. இந்தியாவில் தியேட்டர் கட்டணம் குறைவாக இருப்பது தமிழ கத்தில் தான்; ஆனாலும் பல தியேட்டர்கள் மூடும் நிலைக்கு வந்து விட்டன. எனவே, புதிய படங்கள், தியேட்டர்களில் ரிலீசாகி, 100 நாள் கழித்த பிறகு தான் ஓ.டி.டி.யில் திரையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். அதற்கு சம்மதிக்காத நிறுவனங்களின் படங்களை, தியேட்டர்களில் திரையிட மாட்டோம். இது தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் சேர்ந்து எடுத்த முடிவு.

பெரிய நடிகர்கள், 25 முதல், 150 கோடி ரூபாய், அதற்கு மேலும் சம்பளம் வாங்குகின்றனர். தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பெரும் தொகை வழங்கப்படுகிறது; இதனால், தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர். இதனால் தான், பெரிய ஹீரோக்களின் படப்பிடிப்பே தற்போது நடக்கவில்லை. அவர்கள் வீட்டில் உட்கார்ந்து இருக்கின்றனர். அதிக சம்பளம் வாங்கும் நடிகையுடன் வரும் சிகை அலங்கார நிபுணருக்கு, சம்பளம் தவிர்த்து, தினசரி படியாக 25 ஆயிரம் ரூபாய் வரை தயாரிப்பாளர்களே வழங்க வேண்டியிருக்கிறது. அதே போன்று, பிரபல நடிகர்களுடன் 6 பவுன்சர்கள் வருகின்றனர். அவர்களுக்கும் தயாரிப்பாளர்களே சம்பளத்துடன், தினசரி படியும் வழங்க வேண்டியிருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், இந்த தொகையை தயாரிப்பாளர்கள் தலையில் சுமத்துவது நியாயமல்ல.

எம்.ஜி.ஆர். சினிமாவில் பிசியாக இருந்தபோது, குண்டு கருப்பையா, குண்டு மணி போன்றோர் தான் அவருக்கு பாதுகாவலர்களாக வருவார்கள். அவர்களுக்கு எம்.ஜி.ஆர் தான் சம்பளம் கொடுப்பார். ஆனால் இப்போது சொந்த காரில் வரும் நடிகர், நடிகையர் சிலர், பெட்ரோல் செலவு என்று தயாரிப்பாளர்களிடம் கறக்கின்றனர். இது நியாயமா என யோசிப்பதே இல்லை. பணம் போட்டு படம் தயாரிக்கும் முதலாளிகளை வாழ வைக்க வேண்டும்; அப்போது தான் சினிமா துறை பிழைக்க முடியும். இவ்வாறு, சுப்பிர மணியம் கூறினார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...!ரேஸில் கார் பழுது : அஜித்தின் ... இயக்குனர் செல்வராகவனை பிரிகிறாரா கீதாஞ்சலி? இயக்குனர் செல்வராகவனை பிரிகிறாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Baskaran - Bengaluru,இந்தியா
16 டிச, 2025 - 03:12 Report Abuse
Baskaran நல்ல முடிவு ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in