தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் 'தமிழ் முருகன்' | நீச்சல் உடையில் நடிக்க உடன்பாடு இல்லை : காஜல் அகர்வால் | ஓடிடியில் வெளியானது பெத்தி : விமர்சனமான ஜான்வி கபூரின் காட்சிகள் நீக்கம் | சிறுமி படத்தை தவறாக வெளியிட்ட விநாயகன் மீது புகார் | நிறம்: ஹைப்பர் லிங்க் ஆந்தாலஜி படம் | ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்த சூப்பர் ஹீரோயின்ஸ் படம் | பிளாஷ்பேக்: அதிகம் அறியப்படாத சிவாஜி குடும்ப வாரிசு | பிளாஷ்பேக்: கடைசி படத்தில் பாகவதர் செய்த யுக்திகள் | நீருக்கடியில் சண்டைக் காட்சியில் நடித்து அசத்திய ராஷ்மிகா | டாக்சிக் படத்தில் நயன்தாராவிற்கு 12 கோடி சம்பளமா? |

1990ம் ஆண்டு வெளிவந்த 'கவிதை பாடும் அலைகள்' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஈஸ்வரி ராவ். இயற்பெயர் வைஜயந்தி. தாய் மொழி தெலுங்கு. ஆந்திரப் பிரதேசத்தில் கிழக்குக் கோதாவரி மாவட்டத்திலுள்ள பெத்தாபுரத்தைச் சார்ந்தவர். பாலுமகேந்திராவின் “ராமன் அப்துல்லா” படத்தின் மூலம் புகழ்பெற்றார். குரு பார்வை, சிம்மராசி, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், அப்பு, கன்னத்தில் முத்தமிட்டால் போன்றவை இவர் நடித்த முக்கியமான படங்கள்.
தென்னிந்திய சினிமாவில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஈஸ்வராவ் 28 வருட இடைவெளிக்குப்பின் 'காலா' படத்தில் ரஜனிகாந்த் மனைவியாக நடித்தார். பாலுமகேந்திரா இயக்கிய 'நீங்கள் கேட்டவை' படத்தில் முதலில் ரஜினி நடிப்பதாக இருந்தது. அவருக்கு ஜோடியாக நடிக்க ஈஸ்வரி ராவை முடிவு செய்து வைத்திருந்தார். ஆனால் அப்போது அது பல காரணங்களால் நடைபெறவில்லை.
எப்படியாவது ரஜினி ஜோடியாக ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும் என்று பல நேர்காணல்களில் ஈஸ்வரிராவ் கூறி வந்தார். அவரது விருப்பம் 'காலா' படத்தில் மூலம் நிறைவடைந்தது. இதில் அவர் ரஜினி மனைவியாக நடித்தார். சிறந்த குணசித்ர நடிகைக்கான பல விருதுகளையும் அவருக்கு இந்த படம் பெற்றுத் தந்தது.




