ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
எண்பது மற்றும் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் நகைச்சுவையில் கொடிகட்டி பறந்தவர்கள் தான் கவுண்டமணி-செந்தில் இருவரும். இதில் கவுண்டமணி சில படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டார்.. ஆனால் செந்திலுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இன்னும் அமையவில்லை. சில வருடங்களுக்கு முன் செந்தில் கதாநாயகனாக நடிக்க, ஆதிவாசியும் அதிசிய பேசியும்' என்கிற படம் அறிவிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.
இந்தநிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகி பாராட்டு பெற்ற 'ஒரு கிடாரியின் கருணை மனு' படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா, நடிகர் செந்திலை கதையின் நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளாராம். இந்தப்படத்தில் செந்தில் பல வருட சிறைதண்டனை பெற்ற குற்றவாளியாக நடிக்கிறாராம். மீண்டும் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க ஆர்வம் காட்டி வந்த செந்திலை, சுரேஷ் சங்கையா சொன்ன கதை கதையின் நாயகனாக நடிக்க உடனே சம்மதிக்க வைத்து விட்டதாம். அருப்புக்கோட்டை அருகில் உள்ள கிராமம் ஒன்றில் வரும் பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.