இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமாமோகன் உள்பட பலர் நடித்துள்ள படம் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரின் தொடக்கத்தில் அமைதிப்படை அமாவாசையை நினைவுபடுத்தும் வகையில் கண்களை சிமிட்டியபடி என்ட்ரி கொடுக்கிறார் விஜய் சேதுபதி.
அதையடுத்து அவருக்கும் பார்த்திபனுக்குமிடையே நடக்கும் வார்த்தை போரை வைத்து அவர்கள் இருவருக்குமிடையிலான மறைமுகப்போர்தான் இந்த துக்ளக் தர்பார் என்பது தெரிகிறது. எவனோ ஒருத்தன் கூட இருந்தே என்னை யூஸ் பண்றான். நல்லா வச்சு செய்றான் என்று பார்த்திபனை மறைமுகமாக போட்டுத்தாக்குகிறார் விஜய் சேதுபதி. அதற்கு பார்த்திபன், நமக்கு தெரியாத ஒருத்தன். ஆனால் நம்ம விசயத்தை நன்றாக தெரிந்த ஒருத்தன். யார் அந்த நாலாவது ஆள்? என்று விஜய் சேதுபதியை, அவரிடத்திலேயே கேட்கிறார்.
இறுதியில், எப்படியென்றாலும் நீங்கள் என்னை சும்மா விடமாட்டீங்க. அதனால நானும் உங்களை சும்மா விடுறதா இல்ல. வாங்களேன் நேரடியாக மோதிப்பார்ப்போம் என்று பார்த்திபனை அதிரடியாக ஆக்சனுக்கு விஜய் சேதுபதி அழைக்கும் டயலாக்கும் துக்ளக் தர்பார் டீசரை தூக்கி நிறுத்தியிருக்கிறது. இந்த டீசரை விஜய் சேதுபதியின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.