இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமாமோகன் உள்பட பலர் நடித்துள்ள படம் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரின் தொடக்கத்தில் அமைதிப்படை அமாவாசையை நினைவுபடுத்தும் வகையில் கண்களை சிமிட்டியபடி என்ட்ரி கொடுக்கிறார் விஜய் சேதுபதி.
அதையடுத்து அவருக்கும் பார்த்திபனுக்குமிடையே நடக்கும் வார்த்தை போரை வைத்து அவர்கள் இருவருக்குமிடையிலான மறைமுகப்போர்தான் இந்த துக்ளக் தர்பார் என்பது தெரிகிறது. எவனோ ஒருத்தன் கூட இருந்தே என்னை யூஸ் பண்றான். நல்லா வச்சு செய்றான் என்று பார்த்திபனை மறைமுகமாக போட்டுத்தாக்குகிறார் விஜய் சேதுபதி. அதற்கு பார்த்திபன், நமக்கு தெரியாத ஒருத்தன். ஆனால் நம்ம விசயத்தை நன்றாக தெரிந்த ஒருத்தன். யார் அந்த நாலாவது ஆள்? என்று விஜய் சேதுபதியை, அவரிடத்திலேயே கேட்கிறார்.
இறுதியில், எப்படியென்றாலும் நீங்கள் என்னை சும்மா விடமாட்டீங்க. அதனால நானும் உங்களை சும்மா விடுறதா இல்ல. வாங்களேன் நேரடியாக மோதிப்பார்ப்போம் என்று பார்த்திபனை அதிரடியாக ஆக்சனுக்கு விஜய் சேதுபதி அழைக்கும் டயலாக்கும் துக்ளக் தர்பார் டீசரை தூக்கி நிறுத்தியிருக்கிறது. இந்த டீசரை விஜய் சேதுபதியின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.