ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் |
சுசீந்திரன் இயக்கத்தில், சிலம்பரசன், நிதி அகர்வால், பாரதிராஜா மற்றும் பலர் நடிக்க ஜனவரி 14 பொங்கல் அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம் 'ஈஸ்வரன்'.
இன்று மாலையில் இப்படத்தின் வெளிநாடு ஓடிடி வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அதாவது, தமிழ்நாட்டில் தியேட்டர்களில் வெளியாகும் ஜனவரி 14ம் தேதியன்றே வெளிநாடுகளில் ஓடிடியில் வெளியீடு என்பது தியேட்டர்காரர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஓடிடியில் ஒரு படம் வெளியாவதற்கு சில மணி நேரம் முன்பே மிகத் தெளிவான பைரசி பிரின்ட்டுகள் வெளியாகிவிடுகின்றன. இதனால், தியேட்டர்களில் இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் வருவது கேள்விக்குறியாகிவிடும்.
இப்படியான ஒரு புதிய முறைக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். அதனால், படத்தைத் திரையிட ஒப்பந்தம் போட்டுள்ள தியேட்டர்காரர்கள் படத் தயாரிப்பாளரிடம் படத்தைத் திரையிட விருப்பமில்லை என சொல்லிவிடுங்கள், அதனால் வரும் பிரச்சினைகளை சங்கம் பார்த்துக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால், 'ஈஸ்வரன்' பட வெளியீட்டிற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.