இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
பிரபல கன்னட நடிகை குட்டி ராதிகா. தமிழில் இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். குட்டி ராதிகாவை கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி 2வது திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது.
தற்போது குட்டி ராதிகா ஒரு சிக்கலில் மாட்டி உள்ளார். பெங்களூரில் பல்வேறு மோசடி வழக்கில் கைதாகி உள்ள ஜோதிடர் யுவராஜ் சாமி என்பவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் குட்டி ராதிகாவுக்கு 1 கோடியே 50 லட்சம் கொடுத்ததாக தெரிவித்து உள்ளார்.
இதனை குட்டி ராதிகாவும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அந்த ஜோதிடர் தயாரிக்கும் படத்திற்கு சம்பளமாகத்தான் அந்த பணத்தை பெற்றதாக அவர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக போலீசார் குட்டி ராதிகாவிடம விசாரணை நடத்தினார்கள். முன்னாள் முதல்வரின் மனைவி மோசடி வழக்கில் சிக்கி இருப்பது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த முன்னாள் முதல்வர் குமாரசாமியிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த குமாரசாமி "நடிகை குட்டி ராதிகா யார்?. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. தெரியாதவர்களை பற்றி நான் எதற்காக கவலைப்பட வேண்டும்" என்று கோபத்தோடு கூறினார்.