ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழை மையப்படுத்தி நாற்காலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் அமீர் நாயகனாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குரலில், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழை பாடும் பாடலின் வெளியீட்டு விழா சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் நடைபெற்றது.
இந்த பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அமீர்..,
நாற்காலி படமானது அமைதிபடை படம் போல அரசியல் நய்யாண்டியுடன் கூடிய படம். இந்த படத்தில் நான் எம்.ஜி.ஆரின்.ரசிகனாக நடித்துள்ளேன். இந்த படம் முழுக்க அரசியல் நையாண்டியுடன் கூடிய படம். ஆனால் யாரையும் காயபடுத்தாத அளவிற்கு இருக்கும். எம்.ஜி.ஆரின் பெருமைகள் தொடர்பான படம் என்பதால் முதல்வர் இந்த பாடலை வெளியிட வேண்டுமென்று தயாரிப்பாளர் நினைத்தார்.
எம்.ஜி.ஆர். என்பவர் அனைவருக்கும் சொந்தம் என்ற அடிப்படையில் தான் பயன்படுத்தி உள்ளோம். இந்த படம் மார்ச் மாதம் வெளியாகும். சட்டமன்ற தேர்தலுக்காக இந்த படம் எடுக்கபடவில்லை . அமைதி படைக்கு பிறகு அரசியல் நய்யாண்டியுடன் கூடிய திரைபடம் வரவில்லை.
தமிழக அரசியலிலும்,சினிமாவிலும் எம்.ஜி.ஆரை தவிர்த்து பேச முடியாது. அதனால் தான் இன்றைய நிலையிலும், அவர் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை எழுந்து வருகிறது. அரசியல் என்றாலே அது எம்.ஜி.ஆர் தான் எனத் தெரிவித்தார்.