இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் "களத்தில் சந்திப்போம்". ஜீவா - அருள்நிதி இணைந்து நடிக்க, ராஜசேகர் இயக்கி உள்ளார். கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன் , பிரியா பவானி சங்கர் நடிக்க, காரைக்குடி செட்டியாராக "அப்பச்சி" என்ற வித்யாசமான வேடத்தில் ராதாரவி நடிக்கிறார். இவர்களுடன் ரோபோசங்கர் , பால சரவணன் நகைசுவை வேடத்திலும் இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, பூலோகம் ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பிசாசு பட புகழ் பிரக்யா மார்ட்டின் கவுரவ வேடத்தில் தோன்றுகிறார்.
இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சன் கமர்சியல் படமாக உருவாகியுள்ளது. நட்பு, காதல், நகைச்சுவை, அதிரடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சக படம் இது. கொரோனா பிரச்னையால் முடங்கி இருந்த படம் இப்போது வருகின்ற (தைப்பூசம்) ஜனவரி 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது .