துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பி ஸ்டுடியோ என்ற நிறுவனத்திற்காக இயக்குனர் பாலாவும், இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் இருவரும் விசித்திரன் என்ற பெயரில் ஒரு படம் தயாரித்து வருகின்றனர். இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார். ஆனால் சிஎஸ்கே பிலிம்ஸ் சதீஷ்குமார், கடந்த 2015ம் ஆண்டே விசித்திரன் என்ற டைட்டீலை தான் கில்டு அமைப்பில் பதிவு செய்து கடந்த மார்ச் மாதம் வரை புதுப்பித்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதனால் விசித்திரன் என்ற தலைப்பில் பி ஸ்டுடியோ தயாரிக்கும் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை 14ஆவது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குனர் பாலா, நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, வழக்கை வருகிற 25-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.