இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சென்னை : விஜய் பெயரில் ஆரம்பித்த கட்சிக்கு, தேர்தல் ஆணையம் அனுமதி தராத நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர், தன் பெயரில், புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளார்.
நடிகர் விஜய் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கம் பெயரில், கட்சிஆரம்பிக்க இருந்தார். இதற்காக, மூன்று பெயர்களை தேர்வு செய்து, மத்திய தேர்தல் ஆணையத்திற்கு, எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில், தன் பெயரில் கட்சி ஆரம்பிக்க, விஜய் எதிர்ப்பு தெரிவித்தார். கட்சி ஆரம்பித்தால், தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படும் என கருதிய விஜய், இதுகுறித்து, தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம்அனுப்பினார். எஸ்.ஏ.சந்திரசேகர் பரிந்துரை செய்த, மூன்று பெயர்களில், விஜய் பெயர் இடம் பெற்றதால், அதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி தரவில்லை. மாற்று பெயரை தேர்வு செய்ய அறிவுறுத்தியது.
இந்நிலையில்,அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி ஆரம்பிக்க, எஸ்.ஏ.சந்திரசேகர் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் அறிவிப்புக்குள், புதிய கட்சியை ஆரம்பித்து, நிர்வாகிகளை நியமிக்கும் பணியில், அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.