கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! |
பாகுபலி படங்களின் பிரம்மாண்டத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் படம் 'ஆர்ஆர்ஆர்'. ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவகன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய சுதந்திர போராட்ட காலக் கதையாக உருவாகி வரும் இப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
இப்படம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியாகும் என அறிவித்து இருந்தனர். அது படத்தின் வெளியீட்டு தேதியாக கூட இருக்கலாம் என நாம் சொல்லியிருந்தோம். ஆம் இப்போது அது உறுதியாகி உள்ளது. தசரா பண்டிகையை முன்னிட்டு அக்., 13ல் படம் வெளிவருவதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் இப்படம் வெளியாக உள்ளது. இதுதவிர இன்னும் சில மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த ''அக்., 13ல் நீரும், நெருப்பும் ஒன்றிணைந்து இதுவரை பார்த்திராத ஒரு புதிய அனுபவத்தை, இந்திய சினிமாவின் மிகப்பெரிய, மறக்கமுடியாத ஒரு அனுபவத்தை உங்களுக்கு வழங்க உள்ளது. சவாரி ஆரம்பம்'' என படக்குழு டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அதோடு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் ஜுனியர் என்டிஆர் புல்லட்டிலும், ராம் சரண் குதிரையிலும் ஆக்ரோஷமாக சவாரி செய்கின்றனர். பின்னணியில் ஆர்ஆர்ஆர் என தலைப்பு இடம் பெற்றுள்ளது.