படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

பிக்பாஸ் போட்டியாளர்களை தரம் தாழ்ந்த விமர்சனங்கள் செய்வது வேதனை அளிப்பதாக பிக்பாஸ் சீசன்-4 வின்னரான நடிகர் ஆரி. அதுகுறித்து ஆரி ஒரு பேட்டியில் கூறுகையில், ''தரம் தாழ்ந்த விமர்சனங்களை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிக்பாஸ் வீட்டில் இருந்து நான் வெளியே வந்தபோது இந்த விமர்சனங்களை அறிந்து வேதனை அறிந்தேன். என்னுடைய சக போட்டியாளர்களுடன் எனக்கு போட்டி இருந்தாலும் அவர்களை விட்டுக் கொடுக்க முடியாது. அவர்கள் இல்லாமல் நானில்லை. அவர்களுக்கும் குடும்பம் உள்ளது. அதனால் சமூகவலைதளங்களில் முகம் தெரியாத நபர்கள் கண்டபடி விமர்சிப்பதை ஏற்க முடியாது. அதுவும் என்னுடைய பெயரில் இதுபோன்ற தவறான விமர்சனங்கள் வந்ததை அறிந்து மிகப்பெரிய வேதனை அடைந்தேன். அதோடு, விமர்சனம் என்பது எனது பெயரில் இருந்தாலும், இன்னொருவர் பெயரில் இருந்தாலும் அதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.