வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவராக விளங்கியவர் சினேகா. அவரும், நடிகர் பிரசன்னாவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள். அருண் வைத்யநாதன் இயக்கிய 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் இணைந்து நடித்த போது இருவரும் காதலில் விழுந்தனர். 2012ம் ஆண்டு பிரசன்னா, சினேகா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்தத் தம்பதியருக்கு ஏற்கெனவே 5 வயதில் விஹான் என்ற மகன் இருக்கிறான். கடந்த வருடம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தைக்கு ஆத்யாந்தா எனப் பெயரிட்டனர். இரு தினங்களுக்கு முன்பு குழந்தையின் முதல் பிறந்தநாளை பிரசன்னா, சினேகா தம்பதியினர் கொண்டாடினர்.
அந்தப் புகைப்படங்களை சினேகா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




