'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படமாக்கி வருகிறார். கோட்டா நீலிமா எழுதிய ஷூஸ் ஆப் தி டெட் நாவலை படமாக்க இருக்கிறார் வெற்றி மாறன். சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் வாடிவாசல் படமும், சூரி நடிக்கும் படமும் நாவலை அடிப்படையாக கொண்டதே. கட்டில் என்ற நாவலும் படமாகி உள்ளது.
இந்த நிலையில் மற்றுமொரு நாவல் படமாகிறது. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக அமைதிப்படை 2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களைத் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தைத் தயாரித்து வருகிறார்.
கிராமத்துப் பின்னணியில், வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியலை மையமாக வைத்து, உணர்வுப்பூர்வமான கதைகளை எழுதி வருபவர் பிரபல எழுத்தாளர் மா.காமுத்துரை. இவர் எழுதிய 'முற்றாத இரவொன்றில்' என்கிற நாவலை தழுவி படம் ஒன்றை இயக்கி தயாரிக்க இருக்கிறார் சுரேஷ் காமாட்சி. இந்த நாவலைப் படமாக்கும் உரிமையை மா.காமுத்துரையிடம் இருந்து முறைப்படி பெற்றுள்ளார் சுரேஷ் காமாட்சி.