50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு |
இயக்குனர் ஹரி தொடர்ந்து அதிரடி ஆக்சன் படங்களாக இயக்கி வருகிறார். சூர்யா நடிப்பில் ஆறு, வேல், சிங்கம், சிங்கம்-2, சிங்கம்-3 என வரிசையாக இயக்கினார். அதேபோல் விக்ரம் நடிப்பில் சாமி, சாமி-2 படங்களை இயக்கினார். இந்த படங்கள் எல்லாமே ஒரே மாதிரியான போலீஸ் கதைகள் தான் என்றாலும், திரைக்கதையின் வேகத்தில் முந்தைய சாயல்களை வெளியில் தெரியாத அளவுக்கு செய்து விடுவார் ஹரி.
ஆனபோதும் சிங்கம் -3, சாமி -2 படங்கள் எதிர்பார்த்த படி வெற்றி பெறவில்லை. அதையடுத்து அருவா படத்தை சூர்யாவை வைத்து இயக்குவதாக கூறி வந்த ஹரி, பின்னர் விக்ரமை வைத்து இயக்கப்போவதாக சொன்னார். ஆனால் இப்போது அவர்கள் இருவருமே இல்லாமல் அவரது மைத்துனர் அருண் விஜய் அந்த படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் அருவா படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். இதற்கு முன்பு ஹரி இயக்கிய சேவல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ், நீண்ட இடைவேளைக்குப்பிறகு இப்படத்தில் இணைகிறார்.