தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவில் சில முக்கிய இயக்குனர்கள், நடிகர்கள் நடித்த படங்கள் கூட சில வருடங்களாக வெளிவராமல் முடங்கிக் கிடக்கின்றன. அந்தப் படங்கள் எப்போது வெளியாகும் என்பது அந்தப் படங்களை உருவாக்கியவர்களுக்கே தெரியுமா, தெரியாதா என்பதும் சந்தேகம்தான்.
செல்வராகவன் இயக்கத்தில், யுவன் இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் முடிந்து சில வருடங்கள் ஆகியும் வெளிவராமலே இருந்தது. அந்தப் படம் தற்போது மார்ச் 5 வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.
அந்தப் படத்திற்குக் கிடைத்த விடிவு காலம் முடிந்து சில வருடங்களாக வெளிவராமல் உள்ள மற்ற படங்களுக்கும் கிடைக்குமா என அப்படங்களின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
காஜல் அகர்வால் நடித்துள்ள 'பாரிஸ் பாரிஸ்', விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்துள்ள 'இடம் பெருள் ஏவல்', கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ள 'நரகாசூரன்', எஸ்ஜே சூர்யா நடித்துள்ள 'இறவாக்காலம்', வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'பார்ட்டி', விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்', ஆகிய படங்கள் இந்த வருடமாவது வெளிவந்துவிடுமா என சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்க வேண்டும்.
சந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி வெளிவராமல் தவித்துக் கொண்டிருக்கும் படங்களுக்கு வரப்பிரசாதமாக ஓடிடி வந்துள்ளன. ஆனால், அவற்றில் கூட அப்படங்களை வெளியிட முடியாத அளவிற்கு பிரச்சினைகள் உள்ளது போலிருக்கிறது.