பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இசை அமைப்பாளர்கள் ஹீரோவாகும் காலம் இது. ஏற்கெனவே விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ், ஹிப்ஆப் தமிழா ஆதி, உள்ளிட்ட சிலர் ஹீரோக்களாகி இருக்கிறார்கள். இவர்கள் வரிசையில் பாலாஜி விது தற்போது ஹீரோவாகியிருக்கிறார்.
இவர் தமிழில் இன்பா, சூரன், மஸ்து மஜா மாடி(கன்னடம்) உட்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து தமிழில் வெளியான த்ரிஷா இல்லைனா நயன்தாரா கன்னடா ரீமேக்கில் நடித்து வருகிறார்.
தற்போது கதையின் நாயகனாக தமிழ் படம் ஒன்றில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் நடிக்கிறார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ரங்கா புவனேஷ்வர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகிறது.
இதுகுறித்து பாலாஜி விது கூறியதாவது: நான் நடிக்கலாம் என நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில் தான், இந்த கதையை ரங்கா புவனேஷ்வர் என்னிடம் கூறினார். கதையை கேட்கும்போதே இந்தப்படத்தில் தான் அறிமுகம் ஆகணும் என முடிவு செய்தேன். அதற்காக இரண்டு வருடங்கள் காத்திருந்து இதில் நடித்தேன். திரில்லரும் காதலும் நிறைந்த கதை இது. என்றார்.