தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிசில் நடித்திருக்கிறார் காஜல் அகர்வால். இது நாளை(பிப்., 12) ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதில் நடித்திருப்பது குறித்து காஜல் அகர்வால் கூறியதாவது:
பாழைடந்த ஒரு பேய் பங்களாவில் ஒரு தொலைக்காட்சி தொடரை படம்பிடிக்க போகும் குழுவினருக்கு ஏற்படும் அனுபவங்கள் தான் வெப் சீரிசின் கதை. அந்த குழுவில் ஒருத்தியாக நான் நடித்துள்ளேன். நாங்கள் படப்பிடிப்புக்கு தேர்ந்தெடுத்த இடம் மிக மிக பொருத்தமானது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தோழர் ஒருவருடைய வீடு அது. மலையின் உச்சியில் இருக்கும் அந்த வீடு அங்கு தனித்து இருந்த வீடாகும்.
படப்பிடிப்பு பெரும்பாலும் அங்கேயே தான் நடந்தது. படப்பிடிப்புக்கு பின்னரும் அந்த இடம் தந்த அச்சம் காரணமாக என்னால் தூங்க கூட முடியவில்லை. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கூட அந்த வீட்டிலேயே நான் இருப்பதாக ஒரு பிரமை என்னை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது.
அந்த பங்களாவில் நிஜத்தில் பேய் இருக்கும் என்றே நான் கருதினேன். பேய்க்கு பயந்து கொண்டே பேயாக நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அதை இன்று நினைத்தாலும் என் குலை நடுங்குகிறது. தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கும் அந்த உணர்வு உண்டாகும் என்கிறார் காஜல்.
இந்த தொடரில் கயல் ஆனந்தி, ப்ரியங்கா, செல்வா, டேனியல் போப், சுப்பு பஞ்சு மற்றும் பலர் நடித்துள்ளனர்.