பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்து பின்னர் கதாநாயகியாகவும் வலம் வந்தவர் ஷாலினி. அந்த சமயத்தில் அஜித்துடன் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்தபோது அவர்களுக்கிடையே காதல் உருவாகி திருமணம் செய்து கொண்டனர். தற்போது அஜித்-ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு முழுமையாக சினிமாவை விட்டு விலகி இல்லத்தரசியாக இருந்து வரும் ஷாலினி தற்போது மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக செய்தி ஒன்று சோசியல் மீடியாவில் வலம் வருகிறது. ஏற்கனவே 2000ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்தவரான ஷாலினி, 21 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்கிறார்கள். இந்த செய்தியை இன்னும் சம்பந்தப்பட்ட படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.