மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்து பின்னர் கதாநாயகியாகவும் வலம் வந்தவர் ஷாலினி. அந்த சமயத்தில் அஜித்துடன் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்தபோது அவர்களுக்கிடையே காதல் உருவாகி திருமணம் செய்து கொண்டனர். தற்போது அஜித்-ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு முழுமையாக சினிமாவை விட்டு விலகி இல்லத்தரசியாக இருந்து வரும் ஷாலினி தற்போது மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக செய்தி ஒன்று சோசியல் மீடியாவில் வலம் வருகிறது. ஏற்கனவே 2000ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்தவரான ஷாலினி, 21 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்கிறார்கள். இந்த செய்தியை இன்னும் சம்பந்தப்பட்ட படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.